பசறையில் வீட்டுதோட்டத்தில் கஞ்சா பயிரிட்டவர் கைது!

பசறையில் வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட ஒருவர் இன்று (23) முற்பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கபோவ மாவத்ததையில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்த பசறை பொலிஸார் அவ் வீட்டுத்தோட்டத்தை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்டதில் 5அடி உயரம் கொண்ட 3 கஞ்சா செடிகளையும், 3 அடி உயரம் கொண்ட 2 கஞ்சா செடிகளையும் கண்டறிந்தனர். அவற்றை கைப்பறினர்.

கைதான சந்தேகநபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles