பச்சை, சிவப்பு யானை குட்டிகள் ஓர் அணியாம்: சஜித் கண்டுபிடிப்பு!

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகுவார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து அமைகின்றது. பச்சை யானை குட்டிகளும், சிவப்பு யானை குட்டிகளும் இன்று ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது.

இதனூடாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றி பெற முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது. எனவே உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் நாட்டை கட்டி எழுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கும் வாக்களிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி காரர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 34 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் மினுவாங்கொடையில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

வங்குரோத்தடைந்த நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான நிதி திரட்டப்பட வேண்டும். 76 வருட வரலாற்றை மாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி ஆயிரம் மில்லியன் பெறுமதியான சேவைகளை நாட்டுக்காக செய்திருக்கின்றது. கல்வித் துறையையும் சுகாதாரத் துறையும் மேம்படுத்துவதற்காக சேவைகளை செய்திருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்காக சேவை செய்தபோது அநுரவும் ரணிலும் அச்சமடைந்தார்கள். நாம் சேவை செய்யும்போது அவர்கள் அதனை பரிகாசித்தார்கள். இந்த பரிகாசங்கள் காரணமாக இன்று நாடு வங்கரோத்தடைந்திருக்கிறது. எனவே இந்த அரசாங்கமும் மக்கள் விடுதலை முன்னணியும் சொல்கின்ற பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்.

ரணிலுக்கும் அனுரவுக்கும் நினைக்க முடியாத அளவு நிவாரணத் தொகையை இந்த நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். அவை கடன் அல்ல அது நிவாரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது குறிப்பிட்டார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles