செல்வந்தர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் அரசு பணத்தை அச்சிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிடவுள்ளதாக அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இவ்வாறு பணம் அச்சிடப்படுவது செல்வந்தர்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்கவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதென சஜித் தெரிவித்துள்ளார்.
கோடீஸ்வரர்கள் பில்லியன், ட்ரில்லியன் கணக்கான ரூபா வரியை செலுத்தத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி ஏய்ப்புச் செய்துள்ள தொகைக்கு நிகரான பணத்தை அச்சிட்டு மேலும் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஆயத்தமாகின்றதா? என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
சில செல்வந்தர்கள் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பனவற்றில் பெருந்தொகை கடன் பெற்றுக்கொண்டு மீளச் செலுத்தவில்லையெனவும், இந்தக் கடன் தொகைகளை அறவீடு செய்வது கைவிடப்படுமா? என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
