பதவி துறக்கிறார் நிமல் லான்சா? ஜனாதிபதியுடன் இன்று முக்கிய பேச்சு!

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலக தீர்மானித்துள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி தனது தனிப்பட்ட பணியாள் குழாமை அவர் அமைச்சில் இருந்து விலக்கிக்கொண்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

அமைச்சு செயலாளரின் அணுகுமுறை உட்பட மேலும் சில காரணங்களாலேயே அவர் பதவி விலக தீர்மானித்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

பஸில் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதியான நிமல் லான்சா, அண்மைக்காலமாக அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவை நிமல் லான்சா, இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

Related Articles

Latest Articles