மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என வெளியாகும் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

இது தொடர்பில் பரவுகின்ற தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் சிறப்பாக செயற்பட்டுவருவதாகவும், அவர் அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கிவருவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது.
