அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் விரைவில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
இதன்போது மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு சம்பந்தமாகவும், மேலும் சில விடயங்கள் குறித்தும் அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி பதிலடி கொடுப்பார் எனவும், முக்கிய சில தகவல்களை பகிரங்கப்படுத்துவார் எனவும் அறியமுடிகின்றது.
பதுளை மாவட்டத்தில் வசூலிக்கப்பட்ட சந்தா தலைமையகத்துக்கு வரவில்லை எனவும், பதுளையில் கட்சி சார்ந்த கூட்டங்கள் நடத்தப்படவில்லை எனவும் ம.ம.முவின் தலைவர் இராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். இதனால் சீற்றமடைந்துள்ள அரவிந்தகுமார் எம்.பி., பதிலடி கொடுக்க தயாராகிவருகிறார் என பதுளை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.
