பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியில் பொதுவேட்பாளராக சம்பிக்க?

அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளது எனவும், அதன்மூலம் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு தயார் எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தல்தான் தற்போது நடத்தப்பட வேண்டும். பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதற்கு எவராவது முற்பட்டால் அது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தால் தாக்கம் செலுத்தும். வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பை எதிர்வரும்  ஜுலை மாதத்துக்குள் செய்தாக வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தலை நடத்தலாம்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு எனக்கு இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கூட்டணி கோரிக்கை விடுத்தால் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்.” – என்றார்.

Related Articles

Latest Articles