பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாருடன் முறுகல்- கோட்டை பகுதியில் பதற்ற நிலை

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் காலிமுகத்திடல் நோக்கி பேரணி ஆரம்பிக்கப்பட்ட போதும், பொலிஸார் அவர்களை முன்னால் செல்ல விடாது வீதித் தடைகளை போட்டு வீதிகளை மூடியுள்ளனர்.

இதனால் பொலிஸாருடன் பல்கலைக்கழக மாணவர்கள் முரண்பட்டுள்ளனர்.

குறித்தப் பகுதிக்குள் நுழைவதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், அது தொடர்பான உத்தரவை பேரணி ஏற்பாட்டாளர்களிடம் வழங்கிய போதும், அதனை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

மாணவர்கள் தொடர்ந்தும் கோட்டை பகுதியில் தங்கியிருப்பதால் அங்கு பதற்றமான நிலைமை நிலவுகின்றது.

Related Articles

Latest Articles