ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரவேண்டும் என கோரிக்கைவிடுத்து ஆளுங்கட்சி எம்.பிக்கள் அவரிடம் மனுவொன்றை கையளிக்கவுள்ளனர்.
குறித்த மனுவில் நேற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நிலையில் ஏனையோர் இன்று கையொப்பமிடுவார்கள் என தெரியவருகின்றது.
நாடாளுமன்றம் வருவதற்கு பஸில் ராஜபக்ச ஏற்கனவே திட்டமிட்டுள்ளார், இதற்காக ஜயந்த கெட்டகொட எம்.பி., தனது பதவியை துறப்பதற்கும் தயார் நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே ஆளுங்கட்சி எம்.பிக்கள் தாமாக அழைக்கும் விதத்தில் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் பஸில் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது.