‘பாகிஸ்தான் சம்பவம்’ – முழுமையான விசாரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், தமது கட்சி இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதையும் பாகிஸ்தானில் உள்ள இலங்கைத் தூதுரகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Latest Articles