பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல்…!

காலஞ்சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, மத்துகமவில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் வைத்து நேற்று மின்சாரம் தாக்கி பாலித தெவரப்பெரும உயிரிழந்தார்.

1960 ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி பிறந்த பாலித தெவரப்பெரும, மத்துகம பிரதேச சபை ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

மேல் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தார். 2010 இல் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவானார். இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

Related Articles

Latest Articles