பிசிஆர் பரிசோதனை என்ற போர்வையில் அம்பான்பொல – மஹவ பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் சென்ற மூவர், அங்குள்ளவர்களுக்கு தூக்க மாத்திரையை வழங்கி, பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
பொது சுகாதார அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டே அவர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்தவர்களுக்கு ஏதோ மாத்திரையைக் கொடுத்து, அவர்கள் மயங்கிய நிலைக்குசென்ற பின்பு கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.