பிரதமருக்கு பேரதிர்ச்சி கொடுத்த செந்தில் – ஹப்புதளையில் மக்கள் வெள்ளம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியின்கீழ் பதுளை  மாவட்டத்தில்  போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று ஹப்புதளை நகரில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்திலும் பங்கேற்றார்.

பிரதம அமைச்சரின் இணைப்புச்செயலாளரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த வெற்றிப் பிர்சசாரக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் செந்தில் தொண்டமானுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்காக மூவின மக்களும் ஓரணியில் திரண்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டு, ஹப்புத்தளை நகரமே ஸ்தம்பித்தது.

கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைதானத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் மாத்திரமே பங்கேற்கமுடியும். இந்நிலையில் மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்ததுடன், மைதானத்துக்கு வெளியில் வீதிகளில் அணிதிரண்டு நின்றும், மக்கள் பேராதரவை வழங்கினர்.

 

Related Articles

Latest Articles