பிரதமர் மஹிந்த நாளை நுவரெலியாவில் சூறாவளிப் பிரச்சாரம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (26) நுவரெலியா மாவட்டத்துக்கான பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டங்களில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
ஹட்டனில் நடைபெறும் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார் என இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான  மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாளை மதியம் 2 மணியளவில் ஹட்டன் டி.கே.டபல்யூ (Dkw)ம ண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles