பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் மற்றும் இரண்டு பேர் வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேகநபர்களான மூவரும் சிறைச்சாலையில் இருந்து மெய்நிகர் முறையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்லடியில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டது, காத்தான்குடியில் ஒரு இருவர் கொல்லப்பட்டது, மற்றும் வவுணதீவில் ஒரு தொழிலதிபர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது உள்ளிட்ட 2008-ஆம் ஆண்டில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக – பிள்ளையான் மற்றும் மூவர், லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்படும் ஒருவர் என நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த ஜூன் 17 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிள்ளையன் மற்றும் இராணுவப் புலனாய்வுத்துறைக்கு தகவல் அளிக்கும் இரண்டு பேர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2025 நவம்பரில் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் லண்டனில் இருப்பதாகக் கூறப்படும் நான்காவது சந்தேக நபருக்கு திறந்த பிடியாணை பிறப்பித்து நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles