புதிய ஆட்சியிலேயே இனி அமைச்சரவை கூடும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த வாரத்துக்கான (29.07.2020)  அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என தெரியவருகின்றது.

பொதுத்தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரங்களில் அமைச்சர்கள் பங்கேற்கவேண்டியுள்ளதாலேயே அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாது என அறியமுடிகின்றது.

கடந்தவாரம் நடைபெற்ற கூட்டமே இந்த ஆட்சியின்கீழ் நடைபெற்ற கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்றும், 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதால் அன்றைய தினமும் அமைச்சரவை கூடாது என தெரியவருகின்றது.

எனவே, பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் கட்சி புதிய அரசாங்கமொன்றை நிறுவி, அமைச்சரவையை நியமித்த பின்னரே இனி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும்.

Related Articles

Latest Articles