புத்தாண்டில் சோகம்! விபத்துகளில் 12 பேர் பலி – 74 பேர் காயம்!!

வாகன விபத்துகளால் நேற்று மாத்திரம் 12 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். அத்துடன், 121 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

விபத்துகளில் 74 பேர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. அவற்றின் எண்ணிக்கை 53 ஆகும். 30 ஆட்டோக்களும் விபத்துக்குள்ளாகின.

Related Articles

Latest Articles