கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் ‘மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை’ பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டது.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இரு பெண்கள், கம்பளை, புபுரஸ்ஸ – மணிக்கட்டி, நிவ்போரஸ்ட் டிவிசனில் உள்ள தமது வீடுகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் வந்துள்ளனர்.
இந்நிலையில் மினுவாங்கொடை கொத்தணி பரவலையடுத்து இவ்விரு பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அத்துடன், நிவ்போரஸ்ட் டிவிசனும் முடக்கப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று வெளியானது. இதில் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
நிவ்போரஸ்ட் பகுதியில் இருந்து எவரும் வெளியில் செல்வதற்கும், வெளியிடங்களில் இருந்து அப்பிரிவுக்கு வருவதற்கும் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிவ்போரஸ்ட் டிவிசனில் சுமார் 28 குடும்பங்கள் வாழ்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இப்பகுதி தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்.