2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்கள், தரம் 6 இற்கு புதிய பாடசாலைக்குசெல்ல விரும்பின் அதற்கான விண்ணப்படிவம் தற்போது கோரப்பட்டுள்ளது.
விண்ணப்படிவத்தையும், வழிகாட்டல் அறிக்கையையும் பாடசாலை அதிபர்கள் ஊடாக பெற்றோர் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் கையளிக்கப்படவேண்டும் என்றும், மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை அதிபர்களிடம் அதனை கையளிக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறும்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.

