பண்டாரவளை, பூனாகலை கபரகலை பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவால் நான்கு லயன் குடியிருப்புகள் பகுதியிளவில் சேதமடைந்துள்ளன. 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண் மேடு சரிந்து விழுந்ததில் 30 முதல் 40 வரையான லயன் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

காயமடைந்த எழுவரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அனர்த்தத்தில் எதுவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை.
ராமு தனராஜ்










