இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கிவரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டுடன் 200 வருடங்களாகின்றன.
இக்காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டும் வகையில், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ளார்.











