பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து மனோ – அமெரிக்க தூதுவர் பேச்சு!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைககான அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடை சட்டம், தமிழர் தேசிய பிரச்சினை, தேசிய அரசாங்கம், தேசிய பொருளாதார நெருக்கடி, புலம் பெயர் தமிழர் விவகாரம், நலிவுற்ற பெருந்தோட்ட மக்கள் பிரச்சினைகள் ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles