பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டு மில்லனிய பிரதேசத்தில் விடுதியொன்றில் போதைப் பொருட்களுடன் களியாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மில்லனிய குறுந்துவத்தை பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுதெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிராம் போதைப் பொருள், கேளர கஞ்சா 15 கிராம், டான்சிங் மாத்திரை 10, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 2 ஆகியவற்றையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.