பொதுத்தேர்தலில் இருந்து விலக தயாரா? ராதாவுக்கு அனுசா சவால்!

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் தனக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பொதுத்தேர்தலில் இருந்து அவர் விலகவேண்டும் – என்று பொதுத்தேர்தலில் சுயேட்சையாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நான் அரசாங்கத்திடம் 2 கோடி ரூபா பணம் வாங்கிவிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். நான் பணம் வாங்கியிருந்தால் அதனை நிரூபித்துக்காட்டுமாறு மலையக மக்கள் முன்னணியின் தற்போதைய தலைவருக்கு சவால் விடுக்கின்றேன்.

அவ்வாறு நிரூபித்தால் பொதுத்தேர்தலில் இருந்து விலகிக்கொள்கின்றேன். இல்லையேல் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து நீங்கள் விலகவேண்டும் என்பதை சவாலாக இன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles