பொன்சேகா இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இராஜினாமா செய்யவுள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்குவதற்குரிய கட்டுப்பணத்தை பொன்சேகா நேற்று செலுத்தினார்.

இந்நிலையிலேயே அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகவுள்ளார் என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பொன்சேகா முரண்பட்டுவந்தாலும் தவிசாளர் பதவியில் இருந்து அவரை நீக்க முடியாமல் இருந்தது. இதற்கு எதிராக பொன்சேகா நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் பதவி விலகவுள்ளார் என தெரியவருகின்றது.

 

Related Articles

Latest Articles