அட்டனில் மதுபான போத்தல்களை வைத்திருந்த இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளதாக அட்டன் பொலிசார் தெரிவித்தனர்.
பெருமளவிலான மதுபான போத்தல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போயா தினத்தில் மதுபான சாலைகள் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், இந்த மதுபான போத்தல்கள் எதற்காக வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விற்பனைக்காக வைத்திருந்த மதுபான போத்தல்களைக் கைப்பற்றிய பொலிசார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.