ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில அரசியல் பிரமுகர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
