நாட்டில் இம்மாதத்தில் இதுவரை 184 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் – என்று சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் 888 பேருக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையுடன்கூடிய காலநிலையில் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, கண்டி உட்பட 10 மாவட்டங்களில் டெங்கு நோய் தலைதூக்கும் அபாயம் இருப்பதால், சுற்றுச்சுழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.