ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இம்முறை மே முதலாம் திகதி மேதினக் கூட்டம், பேரணியை என்பவற்றை நடத்தாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“மே முதலாம் திகதி இம்முறை பூரணை தினம் வருகின்றது. எனவே, அன்றைய நாளில் கட்சியால் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படமாட்டாது.
எனினும்,மக்கள் கூட்டம் மற்றும் பேரணி பிரிதொரு நாளில் நிச்சயம் நடத்தப்படும்.
மக்கள் ஆதரவு இல்லை என்பதால் நாம் மே தினக் கூட்டத்தை நடத்தாமல் இருக்கவில்லை. எமக்கு மக்கள் ஆதரவு உள்ளது.
முடிந்தால் மாகாணசைபத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். அப்போது மக்கள் பலம் யாருக்கு என்பது தெரியவரும்.” எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.










