மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்குட்ட எல்டெப் தோட்ட கீழ் பிரிவில் 1, 850 லீற்றர் சட்ட விரோத கசிப்புடன் 58 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மடூல்சீமை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அதிகாரி பிரியந்தவிற்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர் தலைமையிலான குழுவினர் சுற்றிவளைப்பினை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நமது நிருபர்கள்