மத்திய மாகாணத்தில் 5,634 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் இதுவரை 5 ஆயிரத்து 634 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 684 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 3,839 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில்  768 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 27,310 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles