மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்களின் பின்னணி தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளரான அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” மத நம்பிக்கை மற்றும் மத தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல நபர்களால் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான சம்பவங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இப்படியானவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிரான பதிலடி என நினைத்துக்கொண்டு சிலர், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையிலான செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்த தவறையே இவர்களும் செய்கின்றனர்.” – எனவும் அருட்தந்தை சுட்டிக்காட்டினார்.










