மலையக சொந்தங்களின் கண் துடைக்க ஆதரவு தந்த புலம்பெயர் உறவுகள்

அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியை முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்க புலம்பெயர் உறவுகள் சிலர் முன்வந்துள்ளனர்.

ஹட்டன் நகரில் இருந்து நோர்வூட் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் உள்ள நிவ்வெளிகம பகுதியிலேயே இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தீக்கிரையாகிய சுமார் 12 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் 45 குடுமபங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டது.

இவர்களிற்கான கற்றல் உபகரணங்களை பரததர்சனா வாழ்வாதார உதவி நிறுவனம் ஊடாக செல்வி. ச.கவிதா(Germany) .தனது பிறந்த நாள் பரிசாக வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles