“மலையக மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவும்”

” மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என பல வருடங்களாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டுவந்தாலும் இன்னும் சட்டப்பூர்வமாக காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் மக்களே மலையக பெருந்தோட்ட மக்கள். 200 வருடங்களாக இந்நாட்டுக்காக பாடுபட்டுள்ளனர். ஆனால் நாட்டில் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாக அவர்கள் இருக்கின்றனர். ஆட்சிக்குவந்த அரசுகள் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தவறிவிட்டன. அவர்களுக்கென காணி உரிமை இல்லை. லயன்களில்தான் வாழ்கின்றனர்.

இலங்கையர்கள் எனக் கூறப்பட்டாலும் தமது இருப்பிடத்தைக்குறிப்பிட மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் முகவரிக்கூட இல்லை. காணி உரிமை வழங்கப்படும் என உறுதிகள் வழங்கப்பட்டுவருகின்றன. ஆனால் சட்டப்பூர்வமான உறுதி இன்னும் வழங்கப்படவில்லை. பத்திரங்கள் வழங்கப்பட்டாலும் அதன்மூலம் அவர்களின் இருப்பு உறதிப்படுத்தப்படவில்லை.

மலையக மக்களை இந்தியாவில் இருந்து வந்தவர்களாக கருதாமல், இலங்கை பிரஜைகளாகக் கருதி, அவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்கவும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles