வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 10 பேரிடம் 30 இலட்சம் ரூபா பணத்தினை பெற்று ஏமாற்றிய நபரொருவரை மார்ச் மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் நாமல் பெரேரா உத்தரவிட்டார் வட்டவளை, கடவல தோட்டப்பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே திங்கட்கிழமை (27) மேற்படி விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர் குழுவாக இணைந்து கம்பளை’ கேகாலை,கினிகஸ்தேனை, நாவலப்பிட்டி, தலவாக்கலை,பொகவந்தலாவ உட்பட நாட்டில் பல பாகங்களிலும் 30 பேரைவரை ஏமாற்றி சுமார் இரண்டு கோடி ரூபா விற்குமேல் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளதாக தெரியவருவதோடு அதில் கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற 10 முறைப்பாடுகள் தொடர்பாக நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
மேற்குறிப்பிட்ட சந்தேக நபரும் குழுவினரும் இணைந்தே நாட்டின் பலபாகங்களிலும்
மலேசியா உட்பட வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 2 இலட்சம் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளதோடு நேர்முக பரீட்சை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் என்பனவும் மேற்கொண்டு
விமான டிக்கட்டுகளின் நகல்களையும் வழங்கியுள்ளதாக தெரியவருவதுடன் இறுதியாக கடந்த 22 ஆம் திகதி கம்பளை நகரிலும் நேர்முகப் பரீட்சை மருத்துவ பரிசோதனை என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளது
மேலும் மேற்குறிப்பிட்ட சந்தேக நபருடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் கம்பளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்










