மழையால் 3ஆவது போட்டி ரத்து – தொடரை வென்றது நியூசிலாந்து!

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கடைசி 20 ஓவர் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள மே. தீவுகள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

நியூசிலாந்து- மே. தீவுகள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடைபெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் ஆடிய தே. தீவுகள் அணி 2.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை பலமாக கொட்டியதால் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

ஏற்கனவே முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்த நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தொடர்நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நாளை மறுநாள் ஆரம்பமாகின்றது.

Related Articles

Latest Articles