நாட்டில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மஸ்கெலியா நகரிலும் நேற்று மாலை முதல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் டீசல் இல்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.










