மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – 20 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்பு

மஸ்கெலியாவில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குளவிக்கொட்டு சம்பவங்களில் 20 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தோட்ட வலதல பிரிவில் இன்று (30) முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 தோட்டத் தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலர் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சாமிமலை பெரிய சூரியகந்தை பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மூவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Related Articles

Latest Articles