குளவிக் கொட்டுக்கு இலக்கான ஆறு பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மவுஷாக்கலை நீர் தேக்க பகுதியில் உள்ள கென்யோன் நீர் மின் நிலைய பணியாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று மாலை 5 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா நிருபர் – செ.தி.பெருமாள்