மஹர சிறைச்சாலைக்குள் இன்று மாலை கைதிகளுக்கிடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு கைதிக்ள காயமடைந்துள்ளனர்.
ராகம வைத்தியசாலை அதிகாரியொருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தையடுத்து மஹர சிறைச்சாலை மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அங்கு விரைந்தனர்.










