” மஹிந்தவை பிரதமராக்குவோம்” – மொட்டு கட்சி செயலர் அறிவிப்பு

” மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டுமென்றால் அதனை எம்மால் இலகுவில் செய்துவிட முடியும். ஆனால் அவ்வாறான எந்தவொரு முயற்சியும் இடம்பெறவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார். அவருடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஜனாதிபதி, பிரதமர் பதவி ஆசையில் திரியும் ஒரு சிலரே இப்படியான வதந்திகளை பரப்பிவருகின்றனர். மக்கள் ஆதரவுமூலமே மஹிந்தவை பிரதமர் ஆக்குவோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles