” பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகமாட்டார். எனினும், தற்போதைய நிலைவரம் தொடர்பில் அவர் நாளை விசேட அறிவிப்பொன்றை விடுக்கலாம்.” – என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானித்துள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.










