மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி 2021 பெப்ரவரி முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறலாம் எனவும், பழைய முறைமையின்கீழ் 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறும் எனவும் அவ்வட்டாரங்களில் இருந்து மேலும் தெரியவருகின்றது.
அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையில் மாகாணசபைகள் அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.