மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்து

மாகாணசபைத் தேர்தலையும் விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன், உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கதிரை சின்னத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது எனவும், மாகாணசபைத் தேர்தலின்போது சிறப்பான வெற்றி கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

அதேபோல மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் எதிரணிகள் செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles