மாகாணசபைத் தேர்தல் – ஆளுங்கட்சிக்குள் கருத்து மோதல்!

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆளுங்கட்சிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தலை விரைவில் நடத்துமாறு ஒரு சிலரும், அவ்வாறு நடத்தப்படக்கூடாது என மேலும் சிலரும் வலியுறுத்திவருகின்றனர்.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அரச உயர்மட்டத்திடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

சரத் வீரசேகர, அரசுக்கு சார்பான தேரர்களுமே தேர்தல் நடத்தப்படக்கூடாது என கருத்துரைத்து வருகின்றனர். இதனால் ஆளுங்கட்சிக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட வடமத்திய மாகாணசபையின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். ரஞ்சித்,

” மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடாகும். விரைவில் கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எமது கட்சியின் தேசிய அமைப்பாளரோ அறிக்கை எதனையும் விடுக்கவில்லை. ” – என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் வீரசேகர,

” ஒரே நாடு, ஒரே சட்டமெனில் நாட்டில் 9 மாகாணங்களில் 9 சட்டங்கள் இருக்கமுடியாது. அந்தவகையில் மாகாணசபை முறைமையை நாம் நிராகரிக்கின்றோம்.  இது தொடர்பான முடிவை அரசாங்கம் எடுக்கும் என நம்புகின்றேன்.

புதிய அரசியலமைப்பு இயற்றப்பட்டுவருகின்றது. அது வரும்வரை மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.” – என்றார்.

மாகாணசபை முறைமை குறித்து கருத்து வெளியிட்ட அரச சார்பு தேரரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,

” மாகாணசபை என்பது இந்தியாவால் வழங்கப்பட்டது. இம்முறைமை வேண்டாம். எனவே, தேர்தல் நடத்தப்படவேண்டியதில்லை. மாகாணசபை தொடர்பான சட்டம் கிழித்தெறியப்படவேண்டும். இதையும்மீறி தேர்தல் நடத்தப்படுமானால் மக்களை அணிதிரட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles