மாகாண தேர்தலை குறிவைத்து மலையகத்தில் மலர்கிறது புதிய கூட்டணி!

மலையகத்தில் விரைவில் இளைஞர்களின் பங்களிப்புடன் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது திரைமறைவில் இடம்பெற்றுவருகின்றன எனவும், முக்கிய மூன்று அரசியல் புள்ளிகள் பச்சைக்கொடி காட்டும்பட்சத்தில் ஒக்டோபர் ஆரம்பத்தில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரியவருகின்றது.

நுவரெலியா, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தியே புதிய கூட்டணியின் அரசியல் பயணம் அமையுமெனவும், பேச்சுவார்த்தை வெற்றியளித்து கூட்டணி உதயமானால் மாகாணசபைத் தேர்தலில் புதிய கூட்டணி போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

புதிய கூட்டணி பதிவுசெய்யப்படும்வரை, தேர்தல் விவகாரங்களுக்காக பதிவுசெய்யப்பட்ட கட்சியொன்றை கூட்டணிக்கு வழங்குவதற்கு அரசியல் பிரமுகரொருவர் தயார் நிலையிலேயே இருப்பதாகவும், அடுத்தவாரமளவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles