தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நினைவுதினம், இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். நகரில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சமூக நீதிக்கான அமைப்பினர் ஏற்பாட்டிலேயே புலிகளுக்கு எதிரான குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது இலங்கையின் தேசிய கொடியை ஏந்தி , விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ” தற்போதுள்ள நிலையில் இவ்வாறு ஆட்களை ஒன்றுகூடி போராட்டங்கள் நடத்த முடியாது” எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டோரை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.
அவ்வாறு இல்லையேல் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.