மினுவாங்கொட கொரோனா கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.
மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 113 பேர் நேற்று மாலை இனங்காணப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் ஐந்து பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள். எஞ்சிய 108 பேர், தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று இனங்காணப்பட்ட நோய் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 130 ஆகும்.
இதன் பிரகாரம், மினுவாங்கொட கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 721ஆக அதிகரித்துள்ளது.