கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜீகே பகுதியில் மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார்.
வறுமையால் மின் கட்டணம் செலுத்தாததால், இவரின் வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அயல் வீடுகளில் இருந்தே மின் இணைப்பை பெற்று பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை, மின் இணைப்பை பெற முற்பட்டபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் புப்புரஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.