” தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை.” – என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டில் பொருட்களுக்கு சிறிதளவு தட்டுப்பாடுகள் உள்ளன. ஆனாலும் வரிசை யுகம் உருவாகவில்லை.
அதேபோல மின்கட்டணத்தில் எவ்வித மாற்றமும் வராது. பழைய கட்டணமே அறிவிடப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.